கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக அசைவ உணவு வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் தீவிரமாக பரவி வருகிறது, இதனையடுத்து மருத்துவர்கள் மற்றும் காவல்துறையினர் தூய்மைப் பணியாளர்கள் இரவும் பகலும் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.அதனடிப்படையில்தர்மபுரி மாவட்டம் அரூரில்  கொரோனோ   நோய் தொற்று பரவாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள்,மற்றும் காவல்துறையினர்,மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் 144 தடையின் காரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கு இஸ்லாமிய இளைஞர் குழு சார்பாக 500க்கும் மேற்பட்டோருக்கு அசைவ உணவும் 50 மேற்பட்டவர்களுக்கு சைவ உணவும் வழங்கப்பட்டது.